ஓலையின் ஒலிகள்

Vinkmag ad

ஓலையின் ஒலிகள் (3)

மணங்கமழ் ஐம்பால் மடந்தை
================================================ருத்ரா

வெய்ய வறுக்கும் வெம்மை நெடுவெயில்
சுனைதொறும் ஊச்சும் அவல் நிறை நிலனே
வெள் வெள் வெரூஉ தர பாழ்படு சுரத்திடை
நெடும்புல் புதைபு கடுங்கண் உழுவை
புல்லென சிற்றசை சில்வரி காட்ட‌
அவ்வேங்கை தொலைச்சுமுன் அண்ணிய யாவும்
அகல்நெடும் விசையில் கதழ்பரி செய்யும்.
கலிமாக் கூட்டம் விடைசெவி முடுக்கி
கடுகியே அகலும் அக்கானத்தில் ஆங்கு ஒரு
பொறிமா அலமரும் கையறு நிலையில் தன்
மென் தோல் சிலிர்த்து கண்கள் உதிர்த்தன்ன‌
விரையும் ஒடுங்குயிர் காட்சிகள் மலியும்.
முருக்கின் நிவந்த செம்பூ பெயல் மழை
ஊழ்த்த தீயின் உருவம் ஒக்கும்.
சூர் அம் காட்டின் கடுவளி ஆர்க்கும்
பேஏய் ஓசை எதிர்தரப் போந்தும்
கழை வெட்கும் தோளன் மயங்குவன் அல்லன்.
காந்தள் கைவிரல் வருடித் தரூஉம்
மழைக்கண் அரிவைத் தீண்டல் உய்த்து
மணங்கமழ் ஐம்பால் மடந்தை
அருவிய கூந்தல் தழீஇய பொழுதின்
பொலங்கிளர் காலையும் உள்ளி மீளும்
ஐய நின் வெண்மணற் குன்றம் அன்ன‌
சிற்றரண் சிதையா நிற்கும். விரைவுமதி ஆர்க்க!
உள்ளம் தளும்பும் அலைகள் சமஞ்செய்.
அவள் நெகிழ் வளை மீட்டுதி.உன் தேர்மணிக்
கலிமாக்  கதழ்பரிய  விரைதி!விரைதி !

====================================================

27.03.1018 ல்  எழுதியது

News

Read Previous

விருந்தாய் அமையும் !

Read Next

இந்தியா எங்கள் தாய் நாடு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *