ஓங்கியே உயர்ந்திருக்கு !
ஓங்கியே உயர்ந்திருக்கு !
( எம் . ஜெயராமசர்மா …. மெல்பேண் … அவுஸ்திரேலியா )
ரமழான் என்றால் புனிதம் பிறக்கும்
ரமழான் என்றால் புன்மை அகலும்
ரமழான் நாளில் நல்லதை நினைத்து
ரமழான் பிடித்து நன்மைகள் பெறுங்கள் !
மனதினை அடக்கும்போது மாண்புறு ரமழான் காண்பீர்
தினமுமே நன்மைசெய்யின் தினமுமே ரமழான் அன்றோ
உலகிலே மதங்கள் யாவும் உணர்ந்திடும் விரதந்தன்னை
உயர்வெனக் கொள்ளும் ரமழான் உள்ளத்தில் நிற்குமன்றோ !
சரிநிகர் காட்டும் இஸ்லாம் சமயத்தை மனத்திற்கொண்டால்
பொருதுமே நிற்கும்மாந்தர் பொறுப்புடன் அமைதிகாப்பார்
அறிவுடன் இணைந்து இஸ்லாம் அனைத்தையும் சொல்வதாலே
உலகிலே இஸ்லாம் இப்போ ஓங்கியே உயர்ந்திருக்கு !
Tags: ஓங்கி