ஓங்கியே உயர்ந்திருக்கு !

Vinkmag ad
ஓங்கியே உயர்ந்திருக்கு !
 
    ( எம் . ஜெயராமசர்மா …. மெல்பேண் … அவுஸ்திரேலியா ) 
 
 
         ரமழான் என்றால் புனிதம் பிறக்கும்
         ரமழான் என்றால் புன்மை அகலும்
         ரமழான் நாளில் நல்லதை நினைத்து
         ரமழான் பிடித்து நன்மைகள் பெறுங்கள் !
 
 
         
         மனதினை அடக்கும்போது மாண்புறு ரமழான் காண்பீர்
         தினமுமே நன்மைசெய்யின் தினமுமே ரமழான் அன்றோ 
         உலகிலே மதங்கள் யாவும் உணர்ந்திடும் விரதந்தன்னை
         உயர்வெனக் கொள்ளும் ரமழான் உள்ளத்தில் நிற்குமன்றோ !
 
         சரிநிகர் காட்டும் இஸ்லாம் சமயத்தை மனத்திற்கொண்டால்
         பொருதுமே நிற்கும்மாந்தர் பொறுப்புடன் அமைதிகாப்பார்
         அறிவுடன் இணைந்து இஸ்லாம் அனைத்தையும் சொல்வதாலே
         உலகிலே இஸ்லாம் இப்போ ஓங்கியே உயர்ந்திருக்கு !
 
 

 

News

Read Previous

தமிழ் பிறந்தநாள் பாடல்

Read Next

ரம்ஜான் வாழ்த்து கவிதை……

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *