ஒருவன் தானே நானும்

Vinkmag ad

ஒருவன் தானே நானும்

======================================================================

ருத்ரா இ பரமசிவன்.

வாழ்க்கையின் இருட்டு மூலைகளில் கூடவா

இந்த பச்சை மரகத நிழல்கள்?

என்னத்தை சாதித்துவிட்டோம் என்ற

ஏக்கத்தின் கூரிய முட்கள்

ஒரு அம்புப்படுக்கையாய் முன்னின்று

ரத்தம் கசிய வைக்கிறது.

இந்த வெய்யிலின் பளபளப்பு

பச்சைப்புல் விரிப்பிற்கு அக்ரிலிக்  வண்ணம் பூசுகிறது.

இந்த பச்சையெல்லாம்

அன்று அவள் கல கலவென்று சிரித்தாளே

பச்சைக் கண்ணாடி வளையல்களுடன்

அதற்கு ஒரு சமன்பாடு எழுதிவிட முடியுமா?

நினைவின் ஒளியாண்டுகளுக்கு

எத்தனை மில்லியன்கள் எழுதினாலும்

அது கண்முன்னே  தான்

“கழச்சி ” ஆடுகின்றன.

எது எப்படியிருந்தாலும்

காகிதத்தின் பின்னும் எழுத்துக்களின் பின்னும்

ஒளிந்து கொள்ளும் கோழைகளில்

ஒருவன் தானே நானும்.

News

Read Previous

ராப்பாடியின் உடுக்கை

Read Next

உன்னத மார்க்கம் இஸ்லாம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *