ஒருமைப்பாட்டின் ஒலி
ஒருமைப்பாட்டின் ஒலி
திருமலர் மீரான்
குத்புல் அக்தாபு
கெளதுல் இஸ்லாம்
ஷாஹுல் ஹமீது
நாகூர் மீரான்
வலியவர்கள் !
கல்வத் தென்னும்
கலா சாலையில்
ஞானக் கல்வியை
இறைவனின்
அழகிலும்
மொழியிலும்
உவப்பிலும் கற்றதால்
‘குத்பு’ என்னும்
பட்டம் பெற்றவர் !
மீரான் சாகிபின்
மிக்குயர் வாழ்வின்
மேலான ஏடுகள்
சரித்திரத் தாயின்
நெஞ்சில் பதித்த
காலடிச் சுவடுகள் !
முற்றிய தீனின்
ஞானக் கல்வெட்டுகள் !
சத்ய வாழ்வின்
நித்ய நிழல்கள் !!
வட இந்தியாவில்
கருவாகி
நானிலம் முழுவதும்
ஒளியாகி
தென் னிந்தியாவில்
நிலையான
ஷாஹே மீரான்
ஆண்டவர்கள்
தேச மெங்கும்
வலியவர்கள் !
ஒருமைப்பாட்டின்
ஒலியவர்கள் !!
வலியவர்களின்
பாத யாத்திரையில்
பாழும் நிலங்களும்
கருவுயிர்த்தன !
அறுந்து கிடந்த
மனித வீணையின்
நரம்புகள் கூட
அவர்கள் மூச்சுப்பட்டு
மீட்சி பெற்றன !
ஆத்மாவின்
தீன் ராகங்களை
இசைக்கத்
தொடங்கின !!
ஷிர்க்கின்
முகாரியில்
அழுது கொண்டிருந்த
ஆதாமின் பிள்ளைகள்
அவர்களின்
தெளஹீதுத் தாலாட்டால்
அமைதியாய்த்
தூங்கத் தொடங்கின !
வலியவர்களின்
திக்கு விஜயத்தால்
திக்கற்றவர்களும்
கஃபாவின்
திக்கினைத் தெளிந்தனர் !
தீந்தேனை
அருந்தினர் !
அன்று
அவர்கள்
பாடிச் சென்ற
பள்ளி யெழுச்சியால்
இன்று
தென் னிந்தியாவின்
தெருவுகள் தோறும்
பள்ளிவாசல்கள்
நிமிர்ந்து நிற்கின்றன !
நன்றி :
மதி நா
மே 1980