என்றும்நீ வாழுகிறாய்
என்றும்நீ வாழுகிறாய்
—————————–
( எம் . ஜெயராமசர்மா … அவுஸ்த்திரேலியா )
எங்கள்கவி கண்ணதாசன்
எண்பத்தொன் பதகவை
விழாவினிது நடப்பதற்கு
ஈடில்லா மகிழ்வடைந்தேன்
தங்கிநிற்கும் வகையினிலே
தரமிக்க கவிதைதந்து
எங்களுக்கு அளித்தவரை
எப்படிநாம் மறந்துதிடுவோம்
பொங்கிவரும் கடலலைபோல்
புதுப்புதிதாய் பாட்டெழுதி
எங்கும்புகழ் பரப்பியதை
எம்மிதயம் மறந்திடுமா
தங்கத் தமிழ்மகனே
தரமான தமிழ்ப்புலவா
எமைவிட்டுப் போயிடினும்
என்றும்நீ வாழுகிறாய் !
கவியரசர் தமிழ்ச்சங்கம்
காலமெலாம் வாழட்டும்
உணர்வுடைய பெரியோர்க்கு
ஊக்கமது கொடுத்திடட்டும்
புவிமுழுதும் கவியரசர்
புகழ்பாடிப் பொலியட்டும்
செவிநுகரத் தமிழ்நாதம்
சிறக்கவே தந்திடட்டும் !