என்ன தவறு செய்தீர் சுவாமி?

Vinkmag ad

என்ன தவறு செய்தீர் சுவாமி?

*************
என்ன தவறு செய்தீர் ஸ்டேன்ஸ் சுவாமி?

அநாதைகளாய் இருந்த
பழங்குடிகளை அரவணைத்தீர்.

கல்லாய் ஆக்கி வைத்த
கற்காத மனிதர்களை கற்க வைத்தீர்.

தீராத வியாதி கொண்ட
தீண்டா மக்களை
நோய் தீண்டா
மனிதன் ஆக்கினீர்.

நீங்கள் குடி மக்களா?
என கேட்ட குடியை
பார்த்து
கொடி பிடிக்க
கரம் எழுப்பினீர்.

கொடியோர் கையில் ஆட்சி
அதற்கு உன் மரணமே சாட்சி.

கொள்ளை நோய் வந்தும்
உம்மை
கொடியோர் விலங்கிட்டனர்.

அறம் கெட்ட சங்கபரிவாரங்கள்
மத்தியில் உமக்கு
எங்கே நீதி.

உலகமே உம்மை பார்க்கின்றது
ஒய்யராமாய் இருக்கும்
மோடிகளின் போலி முகம்
அச்சறுந்த ராட்டினமாய்
ஆடுகின்றது.

சென்று வாருங்கள் சுவாமி
தேசம் எங்கும்
அக்னி குஞ்சுகளாய்
முளைத்து வருவீர்.

**********

I.முஹம்மது முனீர்
மக்கள் ரிப்போர்ட்
நிறுவன ஆசிரியர்.

https://www.facebook.com/1815760051974422/posts/2864917637058653/

News

Read Previous

கண்ணதாசன் வண்ணக் கவிவாசன்

Read Next

இளம் தென்றலில்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *