எங்களையும் வாழ விடுங்கள்
எங்களையும் வாழ விடுங்கள்
===========================
கூடிவாழ்ந்தோம்
கூட்டமாக வளர்ந்தோம்
தேடிப் பிடிப்போம்
உணவை பகிர்ந்து
உண்போம்…!!!!!
சிறு சிறு சண்டை
போடுவோம்
பெரும் ஓசை
எழுப்புவோம்…!!!
காட்டுக்கு ராஜாவான
சிங்கம் கர்ச்சித்தால்
அடங்கித்தான்
போவோம்…!!!!
வாலை சுறுட்டிக்கொண்டு
மரத்துக்கு மரம் தாவும்
எங்கள் உறவு வானவர்
படையென புராணம்
கூறும் குரங்குப் படை
அவைதான் எங்கள்
உறவில் சொல் கேளாத படை
தோட்டம் புகுந்து அழித்து
திருடுவதில் வல்லமை
பெற்றவைகள்…!!!!
அசைந்து அசைந்து வரும்
மனிதன் அன்பு காட்டினால்
வளைந்து கொடுக்கும்
தன் உருவம் பெரியது ஆனால்
உள்ளம் பிள்ளை போல்
சொல் கேட்கும் எங்கள்
யானை அண்ணா…!!!
குதித்து விளையாடும்
மானும் கர்வம் கொண்டவை
கன்னிப் பெண்களின்
கண் கவர் புள்ளி தனக்கு
என்று பெருமிதம் கொண்டவை…!!!
துள்ளி வரும் முயலும்
பதுங்கி வரும் ஆமையும்
மழலைகளின் உற்ற
தோழன்…!!!
நாட்டைக் காக்கும்
ராஜாவை முதுகில்
சுமப்பவன் எங்கள்
நண்பன் குதிரை..!!!
யாத்திரை செல்ல
நம்பிக்கையோடு
அழைப்பார்கள்
எங்கள் குடும்பத்தில்
உயந்த உறவு
ஒட்டகத்தை…!!!
உதவி செய்த நாங்களே
இன்று உதறப்பட்ட
விலங்கானோம் ….!!
அடித்துப் போட்டு
சமைக்கான் அள்ளிக்
கொண்டு கூண்டில்
அடைக்கான்…!!!
உறவாக என்னிய
மனிதனே எங்கள்
உயிரைப் பலி கொடுக்கான்…!!
காட்டைஅழித்தான்
சிறையில் அடைத்தான்
நோட்டுக்கு கொடுக்கின்றான்..!!!
விடு பட்ட உறவுகள்
காடு தேடி அழைகின்றது
கேட்க நாதி இல்லை
வேட்டைக்காரன்
கண்ணில் பட்டால்
சுட்டுத்தள்ளுகின்றான்..!!
எங்களையும் வாழ விடுங்கள்
எங்களுக்கும் உயிர்
உண்டு உணர்வு உண்டு
உணர்ச்சி உண்டு என்பதை
மனிதன் மறக்கான்..!!
ஆனால் அவனும்
ஒரு நாள் இறக்கான்
இதை ஏனோ ஏற்க மறுக்கான்…!!!
ஆர் எஸ் கலா
இலங்கை