உலக மகிழ்ச்சி தினம்
உலக மகிழ்ச்சி தினம்
எத்தனை கோடி பணமிருந்தாலும்
எத்தனை சொத்துக்கள் சேர்த்திருந்தாலும்
எத்தனை சொந்தங்கள் நிறைந்திருந்தாலும்
எத்தனை பதவிகள் வகித்திருந்தாலும்
எத்தனை விருதுகள் பெற்றிருந்தாலும்
எவ்வளவு புகழ் அடைந்திருந்தாலும்
அவ்வளவும் வீணாகிடும் மனதில்
மகிழ்ச்சி என்பது இல்லையெனில் .
நம்மைப் பிறரோடு ஓப்பிடாமல் ,
நம்மிடம் இருப்பதே போதுமென்றும்
நம்மிடம் இருப்பதைப் பகிர்ந்திடும்போதும்
நம்முள் மகிழ்ச்சி நிறைந்திடுமே .
சாதி, இனம், மொழி , மதமென்று
வேற்றுமை எதிலும் பாராமல் ,
ஏழை, பணக்காரன் எனும்
ஏற்றத்தாழ்வுகள் பாராமல் ,
மனித இனத்தோர் அனைவரையும்
மனதில் சமமாய் நினைத்தபடி
நீதி நெறிப்படி வாழ்வதில்தான்
நெஞ்சில் மகிழ்ச்சி நிறைந்திடுமே .
மகிழ்ச்சி எங்கே உள்ளதென்று
மற்றவை எதிலும் தேடாதீர் .
மகிழ்ச்சி மனதில் இருந்துவிட்டால்
மற்றவை எல்லாம் மகிழ்வாகும் .
மகிழ்ச்சியுடன் ,
சிலேடை சித்தர் சேது சுப்ரமணியம்
20.03.2019 .
Tags: உலக மகிழ்ச்சி தினம்