இரண்டாவது சுதேசிப் போர்

Vinkmag ad
இரண்டாவது சுதேசிப் போர் 
 
ஐந்து  பைசாவுக்கு ஒரு லிட்டர்
தண்ணீர் வாங்கும் கோக் இங்கே 
50 ரூபாய்க்கு விற்கிறான் – நம் 
நீர்வளத்தை மட்டுமின்றி , 
பணவளத்தையும் உறிஞ்சுறான். 
 
தண்ணீர் முழுதும் உறிஞ்சுறான்  
வியர்வை முழுதும் உறிஞ்சுறான் .
பொருளாதாரம் உறிஞ்சுறான் . 
பிழைப்பை இங்கே நடத்துறான். 
 
ஆனால் பாவம் நம்மவரோ 
1 லிட்டர்  தண்ணீருக்கு 
10 ரூபாய்  தருகின்றார்  கடையிலே .
அல்லக்கைகள் சம்பாதிப்பார் இடையிலே 
 
அடிமைப்பட்டுக் கிடந்தபோது 
ஆங்கிலேயன் சுரண்டினான் 
சுதந்திரம்தான் வாங்கியதும் 
நம்ம ஆளு சுரண்டுறான் .  
 
அந்நிய நாட்டு சக்திகள்- நம்
பாரம்பரியம் அறியாமல் 
மென்னியைப் பிடிக்க அனுமதியோம். 
சென்னியிலடித்து விரட்டிடுவோம். 
 
அமெரிக்காவின் கூலிப்படையாய் 
அராஜகமாய் செயல்பட்டுவரும் 
பீட்டா  அமைப்பின் உறுப்பினர்களை -தமிழ் 
நாட்டை விட்டு விரட்டிடுவோம். 

அந்நிய பொருட்களை பகிஷ்கரித்து 
இன்னொரு சுதந்திரப்போர் செய்வோம். 
இந்தியப்பொருளாதாரம் நிமிர 
இன்றே நாமெல்லாம் சூளுரைப்போம். 
 
சு. சேதுசுப்ரமணியம்     

News

Read Previous

ஆழ்கடல் உயிரினங்களுக்கு ஆபத்து

Read Next

சல்லிகட்டுக்கு தடையா?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *