இரண்டாவது சுதேசிப் போர்
இரண்டாவது சுதேசிப் போர்
ஐந்து பைசாவுக்கு ஒரு லிட்டர்
தண்ணீர் வாங்கும் கோக் இங்கே
50 ரூபாய்க்கு விற்கிறான் – நம்
நீர்வளத்தை மட்டுமின்றி ,
பணவளத்தையும் உறிஞ்சுறான்.
தண்ணீர் முழுதும் உறிஞ்சுறான்
வியர்வை முழுதும் உறிஞ்சுறான் .
பொருளாதாரம் உறிஞ்சுறான் .
பிழைப்பை இங்கே நடத்துறான்.
ஆனால் பாவம் நம்மவரோ
1 லிட்டர் தண்ணீருக்கு
10 ரூபாய் தருகின்றார் கடையிலே .
அல்லக்கைகள் சம்பாதிப்பார் இடையிலே
அடிமைப்பட்டுக் கிடந்தபோது
ஆங்கிலேயன் சுரண்டினான்
சுதந்திரம்தான் வாங்கியதும்
நம்ம ஆளு சுரண்டுறான் .
அந்நிய நாட்டு சக்திகள்- நம்
பாரம்பரியம் அறியாமல்
மென்னியைப் பிடிக்க அனுமதியோம்.
சென்னியிலடித்து விரட்டிடுவோம்.
அமெரிக்காவின் கூலிப்படையாய்
அராஜகமாய் செயல்பட்டுவரும்
பீட்டா அமைப்பின் உறுப்பினர்களை -தமிழ்
நாட்டை விட்டு விரட்டிடுவோம்.
அந்நிய பொருட்களை பகிஷ்கரித்து
இன்னொரு சுதந்திரப்போர் செய்வோம்.
இந்தியப்பொருளாதாரம் நிமிர
இன்றே நாமெல்லாம் சூளுரைப்போம்.
சு. சேதுசுப்ரமணியம்
Tags: சுதேசிப் போர்