ஆறாவது திணை ! -கவிஞர் அதாவுல்லாஹ்

Vinkmag ad

 

கலிமா

தொழுகை

ஸக்காத்

நோன்பு

ஹஜ் –

இஸ்லாத்தின் கடமைகள் ஐந்து

ஆறாவது – நபிகள் பேரில் ஸலவாத் !

 

மெய்

வாய்

கண்

மூக்கு

செவி

உணர்வுகள் ஐந்து

ஆறாவது – நபிகள் நாயக அறிவு !

 

சுபுஹு

லுஹர்

அஸ்ர்

மஃக்ரிப்

இஷா –

தொழுகைகள் ஐந்து

ஆறாவது – தஹஜ்ஜுத் !

 

முல்லை

குறிஞ்சி

மருதம்

நெய்தல்

பாலை –

திணைகள் ஐந்து

ஆறாவது – நபிகளின் ரவ்லா !

 

நீர்

நிலம்

காற்று

நெருப்பு

ஆகாயம் –

பஞ்ச பூதங்கள் ஐந்து

ஆறாவது – மிஹ்ராஜ் !

 

எத்தனை அளவிட்டு

ஒன்றைச் சொன்னாலும்

அத்தனையும் தாண்டி

புனிதமாய் ஒன்று முளைக்கும்-

புரிந்து கொண்டால்

பெருமானாரின் மகத்துவம்

மனதுக்குள் விளங்கும் !

 

அது –

அவதாரப் புருடரின்

ஆன்மீகம் அல்ல

மானுடப் புனிதத்தின் மான்மியம் !

 

ஆதம் நபி முதல்

ஈசா நபிவரை

அஹமது நபிகள்

சாட்சி சொல்லும் சத்தியம் !

 

புகழக் கூடாது என்று

சிலர் சொல்பவரைப்

புகழுக்குரியவனே

‘புகழப் பட்டவர்’ – என்று

பெயர் சூட்டிய வரலாறு !

 

ஓரறிவு மரம் முதல்

ஐயறிவு ஒட்டகம் வரை

அவர்களை அறிந்திருந்தது !

 

கல்லுக்கும்

அறிவிருந்த காரணத்தால்

அதுவும் அவர்கள்

கைகளில் தஸ்பீஹு செய்தது !

 

நாயகத் தோழர்களுக்கு

நபிகள் நாயகத்தின்

நகத்துண்டுகளும்

வியர்வைத் துளிகளும்

அவர்களை நரகிலிருந்து

காக்கும் கேடயமானது !

 

இவ்வுலகில் மட்டுமல்ல

இறப்பில்லா மறுமையிலும்

சிறப்பாகி நிற்பது –

இறப்பில்லா எங்கள் நபிகளின்

புகழ்ப் பெயரும்

புகழ்க் கொடியும்தான் !

 

அவர்களது

பிறப்பும் இறப்பும்

நமது சுவனங்களை

உயிர்ப்பிக்கச் செய்யும் ஜனனம் !

 

எங்கள் சுவனங்களைத்தாம்

இந்த மீலாதுகளில் அலங்கரிக்கிறோம்

அதன்வழி

எங்கள் இம்மையும் புனிதமாகிறது

அல்லவா ?

 

 

நன்றி : இனிய திசைகள் – பிப்ரவரி 2013

News

Read Previous

பேராசிரியர் பெரியார்தாசன் இஸ்லாத்தைத் தழுவினார்

Read Next

மனப்பாடம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *