ஆனந்த சுதந்திரம் !

Vinkmag ad

சுதந்திரதின நல்வாழ்த்துகள் !

         
 
                                       ஆனந்த சுதந்திரம் !
 
                 (  எம் .  ஜெயராமசர்மா …. மெல்பேண் …. அவுஸ்திரேலியா ) 
 
 
                   ஆன்மீகக் கொள்கைதனை அரவணைக்கும் பாரதமே 
                   அஹிம்சையினை உள்ளுணர்வாய் ஆக்கிநிற்கும் பாரதமே
                   அகிலத்தில் பலநிலையில் வளர்ந்துவரும் பாரதமே 
                    ஆனந்த சுதந்திரத்தை அமுதமெனக் காத்திடுவாய் !
 
                   பலபேரின் கண்ணீரால் எழுச்சிபெற்ற பாரதமே
                   பலபிரிவு மக்களையும் இணைத்துநிற்கும் பாரதமே
                    நிலமீது பலசண்டை நிகழாமல் இருப்பதற்காய் 
                    பலநீதி இலக்கியங்கள் படைத்தளித்தாய் உலகினுக்கே !
 
                    சர்வவுமே இறைவனென சாற்றிநிற்கும் பாரதமே 
                    சமத்துவத்தை நிலைநிறுத்த தானுழைக்கும் பாரதமே
                    இவ்வுலகை இரட்சிக்க ஞானிகளை ஈந்தளித்தாய் 
                     இவ்வுலக மாந்தரெலாம் இந்தியாவை நோக்குகிறார் ! 
 
                    வேதமொடு சாத்திரங்கள் வியந்துவிடும் இலக்கியங்கள்
                     பாரதத்தாய் உலகினுக்கு ஈந்தளித்தாள் பொக்கிஷமாய் 
                     யார்வந்து போனாலும் நலம்விளைக்கும் எனும்நினைப்பை
                      நாநிலத்துக் கீந்தளிக்கும் பாரதத்தாய் வாழியவே ! 
 
                   புத்தர்காந்தி புனிதநபி புதுவெளிச்சம் யேசுபிரான்
                   அத்தனைபேர் கொள்கைகளும் அடக்கிநிற்கும் பாரதமே
                   உத்தமர்கள் பலபேர்கள் உன்மடியில் பிறந்தார்கள் 
                   உயர்வான சுதந்திரத்தை உயிர்ப்புடனே வைத்திடுவாய் !
 
                   இமையும்முதல் குமரிவரை எல்லையினைக் கொண்டுள்ளாய் 
                   இயலாமை எனும்நினைப்பை இன்மையாக்க முனைகின்றாய் 
                   தவவலிமை மிக்கோரால் தான்வரங்கள் பெற்றுள்ளாய்
                   தகைமைநிறை சுதந்திரத்தை தக்கபடி காத்திடுவாய் !
            
                   சுதந்திரமாய் உலவுதற்குச் சுதந்திரத்தை விட்டிடுவோம் 
                   சுதந்திரத்தை யாவருமே சுவாசிக்கச் செய்துநிற்போம் 
                   சுதந்திரத்தை சுகமாக சுவையாக்க முனைந்நிதிடுவோம் 
                   சுதந்திரத்தைக் குலைப்பார்க்குச் சுதந்திரத்தை உணர்திடுவோம் !
 
               ஆனந்த சுதந்திரத்தை அகமகிழக் கொண்டாட
               ஆனந்தப் பூங்காவை அமைத்திடுவோம் பாரதத்தில் 
               ஆனந்தம் எனுமுணர்வை அனைவருமே பெற்றுவிட 
                அன்புபாசம் நேசமொடு அஹிம்சைதனை அரவணைப்போம் ! 
 
              

News

Read Previous

இனிய சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்

Read Next

திருச்சியில் ஏற்றுமதி,இறக்குமதி & வணிக இலவச பயிற்சி முகாம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *