அப்துல் கலாம்

Vinkmag ad

எத்தனையோ  மகன்கள் பிறந்திருக்கலாம்

மகான்களாய்த் சிலரதிலே  திரிந்திருக்கலாம்

எத்தனையோ  மனிதர்கள் பிறந்திருக்கலாம்

புனிதராய்ப் பலரதிலே   திகழ்ந்திருக்கலாம்

 

எத்தனையோ பிறவிகள்   பிறந்திருக்கலாம்

துறவியாய் அனைத்தையும்  துறந்திருக்கலாம்

பலகோடி வகையாய்ப் பிறந்திருக்கலாம்

பலகோடி வகையாய்ச் சிறந்திருக்கலாம்

 

எல்லா உயிர்களையும்  பிடித்திருக்கலாம்

எல்லா உயிர்க்குமே  பிடித்திருக்கலாம்

மனிதராய் யாரும் பிறப்பதில்லை

வளர்ந்தபின் குழந்தையா யிருப்பதில்லை

 

பிறந்த பின் மனிதராய் வளர்வதில்லை

மாமனிதராய் பலரும்  வாழ்வதில்லை

குழந்தையாய்ப் பிறந்து மனிதராய் வளர்ந்து

மாமனிதராய்த் திகழ்ந்து மேதையாய் மலர்ந்து

 

மனிதாபிமானம் கொண்டு மனிதருள் மனிதராய்

மனதோடு  மனதாகப் புனிதராய்  கலந்தவர்

திரு அப்துல்கலாம் இப்போது இறந்திருக்கலாம்

இவ்வுலகை விட்டு மறைந்திருக்கலாம்

 

இவ்வுலகம் மறக்காமல் இருந்தவர் வாழ்ந்தவர்

இன்னுமாயிரம் ஆண்டுகள் இருந்திருக்கலாம்

திரு அப்துல்கலாம்  இறவாமல் இருந்திருக்கலாம்

நாம் இவரை  எப்போதும் மறவாமல் இருக்கலாம்

 

அன்புடன்

தமிழ்த்தேனீ

அனைத்து உயிருக்கும் அவனே ஆதி

அவனை விடவா  உயர்ந்தது ஜாதி?

மனிதமும்,உலகமும் காப்போம்,

மௌனம் உணர்த்தாத பொருளை

சொற்கள்  உணர்த்தாது

அன்புடன்
தமிழ்த்தேனீ
http://thamizthenee.blogspot.com
rkc1947@gmail.com
http://www.peopleofindia.net

News

Read Previous

இந்தியாவுக்கு அசுர வல்லமை அளித்த ராக்கெட் விஞ்ஞானி

Read Next

வழுதாவூர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *