அன்னையர் தினம்

Vinkmag ad

இன்பம் இருவருக்கும் மகிழ வைத்தான்..
துன்பம் ஒருவளுக்கு துவள வைத்தான்..!!
வஞ்சகன் அவனெனில் வஞ்சியவள் என்செய்வாள்..?
நெஞ்சகம் உனை நினைத்து சஞ்சலம் சகித்திடுவாள்..!!!

பிள்ளை உன்னை பெறுவதற்கு ..
பெற்றோரில் ஒருவர் இழப்பென்றால்.?
கிள்ளை நீயும் மறவாதே அது …
பெற்றவரில் அன்னை அவளன்றோ ..!!!

மண்ணில் உன்னை ஈவதற்கு..
தன்னில் தன்னை அடகு வைத்தாள்..!!
உன்னில் தன்னை காண்பதற்கு…
தன்னில் கருவாய் இடமளித்தாள்..!!

மீண்டால் இன்பம் மாண்டால் துன்பம்..
மனதில் கொண்டே கருவில் வளர்த்தாள் ..!
வாழ்ந்தால் தாயாய் வீழ்ந்தால் சேயாய்…
கனவில் கண்டே உருவம் வரைத்தாள்..!!

உயிரை பணயம் வைத்து ஈன்றாள்- உன்னை
உடலை பிணையம் வைத்து காத்தாள்-அன்னை
ஊணை உயிரை உருக்கி வளர்த்தாள் உன்னை..!!
உணர்வாய் அவளே கடவுள்… உண்மை ..!!!!

இன்றய மற்றும் நாளைய அன்னையர் அனைவருக்கும் அன்னையர் தின வாழ்த்துக்களுடன் …. -கமல அருள் குமார்

News

Read Previous

ஆட்சி

Read Next

காலி இடம் விற்பனைக்கு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *