அத்தை மகள்

Vinkmag ad

அத்தை மகள்

 
வானுயர வளர்ந்த கொடிகள்
வண்ண மலர் பூக்கள் குலுங்க
கண் கொள்ளா காட்சியாக
கண்டு அதனை  ரசிக்க
பருவ மங்கை ஒருத்தி
பாதம் படாமல் நடந்து வர
பூத்து குலுங்கும் பூக்கள் நடுவே
புகுந்து வரும் வேளையிலே
என்னை கண்ட பருவ மங்கை
எடுத்தாள் ஓட்டம் கொடிகளிடையே
கொடிகளைக் கண்ட நான், அவளின்,
கொடியிடையைக் கண்டேன்
பூக்களைக் கண்ட   நான், அவளின்
பூ முகத்தைக் கண்டேன்.
பார்த்ததும் பதிந்தது மனதில்
பட, படவென்று அடித்தது நெஞ்சில்
துடித்தது மனது மட்டும்,
துரத்திப் பிடிக்க வேண்டுமென்று
மனதை மாற்றிக்கொண்டு,
மறுபடி திரும்பி விட்டேன்.
வீடு வந்து சேர்ந்து விட்டு,
விட்டத்தை பார்த்து கொண்டு,
கண்ணை மூடி கனவு கண்டேன்,
கள்ளி, அவள் கண்முன் நின்றாள்.
கண்ணை கசக்கி திரும்பி பார்த்தேன்,
களுக்கென்று சிரித்து அறையினில் மறைந்தாள்.
அன்னையை அழைத்து,  யாரவள் என்றேன்,
அத்தை மகள் என்று அதிரச்செய்தார்.
பருத்தி செடியோ பஞ்சாய் காய்க்கும்,
புடவையாய் காய்த்ததில் பூரிப்படைந்தேன்.

செல்வ. வெற்றிவேல் செழியன்.
துபாய்.

News

Read Previous

நாசர் உசேன் இல்ல மண விழா அழைப்பிதழ்

Read Next

தல, வயிற்று வலி, உடல் எடை குறைதல்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *