அகத்தில் கொண்டு வாழு !
அகத்தில் கொண்டு வாழு !
( எம் . ஜெயராமசர்மா.. மெல்பேண் … அவுஸ்திரேலியா )
நாடுபோற்ற வாழு
நன்மைநினைத்து வாழு
ஊடலொழித்து வாழு
உண்மையோடு வாழு
வாழவேண்டும் எண்ணம்
மனதில்கொண்டு வாழு
மனம்முழுக்கத் தூய்மை
நிறைத்துக்கொண்டு வாழு !
அன்னைதந்தை உந்தன்
அகத்தில்கொண்டு வாழு
அறிவைநல்கும் ஆசான்
ஆசீபெற்று வாழு
உன்னைவிரும்பும் வண்ணம்
உயர்ந்துநிற்கும் பெரியோர்
உன்னைவாழ்த்தி நிற்க
உளத்தாலுயர்ந்து வாழு !
கற்றவற்றை நாளும்
கருத்தில்கொண்டு வாழு
கற்கும்நூல்கள் தன்னை
கவனங்கொண்டு பாரு
கஞ்சிகுடிக்கும் வாழ்வு
வந்தமையும் போதும்
கற்கும்நிலைய நாளும்
கடமையாக்கி வாழு !
உண்மையுந்தன் வாழ்வில்
உயர்வுஎன்று வாழு
உலகுபழிக்கும் யாவும்
உதறிவிட்டு வாழு
அன்புதன்னை உந்தன்
அறமாய்கொண்டு வாழு
அரவணைக்கும் பாங்கை
அகத்தில்கொண்டு வாழு !
தெய்வமுண்டு என்று
தினமுமெண்ணி வாழு
பொய்மையுந்தன் வாழ்வை
பொசுக்குமென்று வாழு
கோபம்கொண்டு வாழ்ந்தால்
குணமிழந்து போவாய்
ஆதலாலே நீயும்
அகிம்சையேற்று வாழு !
Tags: அகம்