கடன் வாங்கிப்பார்!
கடன் வாங்கிப்பார்!
———————————–
செல் பேசியில் பொய் பேச வைக்கும்..
அடிக்கடி எண்களை மாற்றத் தோன்றும்…
அடிஸனல் எண்களாக சேர்க்கத் தோன்றும்….
நாட் ரீச்சபில், மிஸ்ஸுடுகால் இவற்றைக் கொடுத்து,
கடன் தந்தவரை காயப்படுத்த முயல்வாய்…
இருந்து கொண்டே இல்லை என்பாய்…
அடுத்த வாரம் ஏற்பாடு என்பாய்..
அதற்கு மேலும் தவணை சொல்வாய்..
கடன் தந்தவனுக்கு செருப்பு தேயும்..
உனக்கோ மரியாதை தேயும்..
எனவே கடன் வாங்கும் முன், யோசித்துப்பார், உண்மையிலேயே இத்தொகை தேவைதானாவென்று!
(மர்யம் செல்வன், தொண்டி)
Tags: கடன் வாங்கிப்பார்