மோடி அரசின் மக்கள் விரோத சூழ்ச்சிகளை மக்களே தான் முறியடிக்க வேண்டும்!

Vinkmag ad
மோடி அரசின் மக்கள் விரோத சூழ்ச்சிகளை மக்களே தான் முறியடிக்க வேண்டும்!
GST என்னும் வரி கொள்ளைகளை மக்களின் தலையில் சுமத்தி தொட்டிலில் இருந்து சுடுகாடு வரைக்கும் வரிகளை போட்டு மனித ரத்தங்களை உறிஞ்சி குடிக்கும் ஆக்டோபஸாக மத்திய பாஜக மோடி அரசு செயல்படுகிறது.
நாம் GST வரியை எதிர்த்து போராட வேண்டாம்,எந்த சூழ்நிலையிலும் ஹோட்டல்களில் சாப்பிட மாட்டோம் என உறுதி ஏற்போம்,தவிர்க்க முடியாத சூழலில் வெளியூர் சென்றால் கூட வீட்டில் இருந்து புளியோதரை,லெமன் சாதம் தயார் செய்து கொண்டு செல்வோம்.
சினிமாவுக்கு தியேட்டர் போக மாட்டோம் என்று சபதம் ஏற்போம்,காய்கறிகளை தெருவோர நடைபாதை வியாபாரிகளிடமே வாங்குவோம் என்று உறுதி ஏற்போம்.
பட்டணத்தில் உள்ள சூப்பர் மார்க்கெட்களில் போய் மளிகை பொருட்கள் வாங்குவதை தவிர்த்து நமது தெருக்களில் உள்ள சிறு சிறு மளிகை கடைகளில் நமக்கான பொருட்களை வாங்குவோம் என்று சபதம் ஏற்போம்.
தேவையற்ற வெளியூர் சுற்றுலா பயணங்களை தவிர்ப்போம்.நாம் உண்டு நமது வீடு உண்டு என்று நமக்கு நாமே என்னும் உறுதியான திட்டங்களை முன்னெடுப்போம்.
நாம் வாழ போகும் எளிமையான வாழ்க்கையை கொஞ்ச காலத்திற்கு பாசிஸ எதிர்ப்பு கொள்கையாக கடைபிடிப்போம்.
கடந்த காலங்களில் நமது முன்னோர்கள் வாழ்ந்த ஆரோக்கியமான வாழ்வியல் நடைமுறை இதுதான்.
நமது புறக்கணிப்பு ஒவ்வொன்றும் மோடியின் கார்ப்பரேட் முதலைகளுக்கு அடிக்க போகும் பொருளாதார சாவு மணியாக இருக்கட்டும்.
மேலே சொன்ன உறுதி மொழிகளை நான் உளமாற ஏற்று கொண்டேன்.நீங்களும் ஏற்று கொள்வீர்களா?
-கீழை ஜஹாங்கீர் அரூஸி.

News

Read Previous

வா.. நாமெல்லோரும் ஒன்றே..

Read Next

கடல் நீரைக் குடிநீராக்க ஓர் எளிய வழி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *