புத்துணர்வு
புத்துணர்வு
உனது மனம் புத்துணர்வுடன் இருக்கும் போது இந்த முழு பிரபஞ்சமும் ஒரு மெல்லிசையாக மாறும். நீ புத்துணர்வுடன் இருந்தால் எல்லாமும் புதுமையாக இருக்கும். இந்த இயற்கையே புத்துணர்வாக மாறும். நீ புத்துணர்வுடன் இருந்தால், நினைவுகள் சுமையாக இல்லாமல் இருக்கும் போது எல்லாமும் இளமையாக புதிதாக வேறுபட்டதாக இருக்கும்.
நீ வெறுமையிலிருந்து செயல் புரியும் போது அங்கு உன்னைச் சுற்றி ஒரு புத்துணர்வு இருக்கும்.
சக்தி தேங்கி நிற்காமல் ஓடும் போது நீ புத்துணர்வாக இருப்பாய், நீ நதி போல ஓடுவாய்.
சாட்சி பாவமாக இரு. நீ புத்துணர்வோடு இருக்கும் போது மட்டுமே சாட்சி பாவமாக இருக்க முடியும்.
பக்குவப் படுதல் என்பது புத்துணர்வுடன் வெகுளித் தனமாக தூய்மையாக இருத்தலாகும்.
கடந்த காலத்தை பொறுத்த வரை இறந்து விடு. அப்போது தான் நீ புத்துணர்வுடன் புதிதாக இருக்க முடியும்.
Tags: புத்துணர்வு