உன்னால் முடியும் ….. உயர முடியும்
ஒரு தவளையை பிடித்து தண்ணீரில் போட்டு கொதிக்க வையுங்கள்,
*
தண்ணீரின் வெப்பம் அதிகரிக்கும் போது, தவளை தன் உடலை அந்த வெப்ப நிலைக்கு ஏற்ப மாற்றி கொண்டே வரும்……
*
வெப்பம் ஏற ஏற தவளையும் அந்த வெப்பநிலைக்கு ஏற்ப தன் உடலை அந்த வெப்பத்துக்கு ஏற்ப மாற்றி கொள்ளும்.
*
தண்ணீர் கொதிநிலையை அடையும் போது, வெப்பத்தை தாங்க முடியாமல் தவளை பாத்திரத்தில் இருந்து வெளியே குதிக்க முயற்சி செய்யும்.
*
ஆனால், எவ்வளவு முயற்சி செய்தாலும் தவளையால் வெளியேற முடியாது.
*
ஏன் என்றால்….. வெப்பத்துக்கு ஏற்ப தன் உடலை மாற்றி கொண்டே வந்ததால் அது வலுவிழந்து போய் இருக்கும். சிறிது நேரத்தில் அந்த தவளை இறந்து விடும்.
*
எது அந்த தவளையை கொன்றது…?
*
பெரும்பாலானோர் கொதிக்கும் நீர் தான் அந்த தவளையை கொன்றது என்று சொல்வீர்கள்.
*
ஆனால், உண்மை என்னவென்றால், “எப்போது தப்பித்து வெளியேற வேண்டும் என்று சரியாக முடிவெடுக்காத அந்த தவளையின் இயலாமை தான் அதை கொன்றது”……
*
நாமும் அப்படித்தான் எல்லோரிடமும் சூழ்நிலைக்கு ஏற்ப அனுசரித்து போகிறோம்.
*
ஆனால்….. நாம் எப்போது அனுசரித்து போக வேண்டும், எப்போது எதிர்கொள்ள வேண்டும் என்பதை தெரிந்து வைத்திருக்க வேண்டும்.
*
மன ரீதியாக, உடல் ரீதியாக, பண ரீதியாக மற்றவர்கள் நம்மை நசுக்க ஆரம்பிக்கும் போது, நாமும் சுதாரிக்காமல் போனால் மீண்டும் அதையே தொடர்ச்சியாக செய்ய ஆரம்பிப்பார்கள்.
*
உடலில் வலிமை இருக்கும் போதே, அவர்களிடமிருந்து தப்பித்து விடுதல் நன்று.
*
“நாம் அனுமதிக்காமல் நம்மை அழிக்க எவராலும் முடியாது”…
🏿விழுந்தால் அழாதே . . .
எழுந்திரு 🏿
🏿தோற்றால் புலம்பாதே . . .
போராடு 🏿
🏿 கிண்டலடித்தால் கலங்காதே . . .
மன்னித்துவிடு 🏿
🏿தள்ளினால் தளராதே . . .
துள்ளியெழு 🏿
🏿நஷ்டப்பட்டால் நடுங்காதே . . .
நிதானமாய் யோசி🏿
🏿ஏமாந்துவிட்டால் ஏங்காதே . . .
எதிர்த்து நில் 🏿
🏿நோய் வந்தால் நொந்துபோகாதே . .
நம்பிக்கை வை 🏿
🏿கஷ்டப்படுத்தினால் கதறாதே . . .
கலங்காமலிரு 🏿
🏿 உதாசீனப்படுத்தினால் உளறாதே . .
உயர்ந்து காட்டு 🏿
🏿 கிடைக்காவிட்டால் குதிக்காதே . . .
அடைந்து காட்டு 🏿
🏿மொத்தத்தில் நீ பலமாவாய் 🏿
🏿சித்தத்தில் நீ பக்குவமாவாய் 🏿
உன்னால் முடியும் .
உயர முடியும் . . .
உதவ முடியும் . . .
⚜உனக்கு உதவ நீ தான் உண்டு ⚜
🏿உன்னை உயர்த்த நீ தான் 🏿. . . ⚜நம்பு⚜ . .
🏿 உன்னை மாற்ற நீ தான் 🏿. . .🏿 முடிவெடு🏿 . . .
🏿நீயே பாறை🏿🏿.நீயே உளி . 🏿. .
🏿நீயே சிற்பி . . .நீயே செதுக்கு 🏿. . .
🏿நீயே விதை . . .நீயே விதைப்பாய் 🏿. . .
🏿நீயே வளர்வாய் 🏿. 🏿நீயே அனுபவிப்பாய் 🏿. . .
🏿நீயே நதி🏿 . . .🏿 நீயே ஓடு🏿 . . .
🏿நீயே வழி🏿 . . .🏿 நீயே பயணி🏿 . . .
🏿நீயே பலம் 🏿. . . 🏿நீயே சக்தி 🏿. . .
நீயே ஜெயிப்பாய்
எப்பொழுதும் நம்பிக்கை இழக்காதே