மலேஷியாவில் மௌலவி உமர் ஜஹ்பர்

Vinkmag ad

கோலாலம்பூர் : முதுகுளத்தூர் திடல் பள்ளிவாசல் தலைவர் முதுவைக் கவிஞர் மௌலவி ஏ. உமர் ஜஹ்பர் மன்பயீ தனது பேரனின் சுன்னத் கல்யாணத்திற்காக மலேஷியா சென்றுள்ளார்.

மலேஷியாவிலிருந்து முதுகுளத்தூர்.காம்-ஐ தொடர்பு கொண்டு மலேஷியா வானொலியில் ரமலான் சொற்பொழிவிற்காக தனது உரை பதிவு செய்யப்பட்டதாக தெரிவித்தார்.

மேலும் முதுகுளத்தூர் பெரிய பள்ளிவாசல் ஜமாஅத் புதிய நிர்வாகிகளுக்கும், ஐக்கிய அரபு அமீரக ஐக்கிய முதுகுளத்தூர் முஸ்லிம் ஜமாஅத் புதிய நிர்வாகிகளுக்கும் தனது வாழ்த்துக்களையும் துஆக்களையும் தெரிவித்துக் கொண்டார்.

விரைவில் நம்மை நெருங்க இருக்கும் புனித ரமலான் நல்வாழ்த்துக்களையும் தெரிவித்தார்.

News

Read Previous

கத்தார் முதுவை ஜமாஅத்தினர் உம்ரா பயணம்

Read Next

மதுரையில் தமீமுல் சம்சுதீனுக்கு பெண் குழந்தை

Leave a Reply

Your email address will not be published.