தமிழக மீனவர்கள் தாக்கப்படும் விவகாரம் : இலங்கை அமைச்சர்களுடன் கே . நவாஸ் கனி எம்.பி., கவிஞர் கனிமொழி எம்.பி., பேச்சுவார்த்தை
தமிழக மீனவர்கள் தாக்கப்படும் விவகாரம் : தேர்தல் வாக்குறுதி நிறைவேற்ற இலங்கை அமைச்சர்களுடன் கே . நவாஸ் கனி எம்.பி., கவிஞர் கனிமொழி எம்.பி., பேச்சுவார்த்தை
தமிழக மீனவர்கள் தாக்கப்படுவது குறித்து சுமுக தீர்வு ஏற்படுத்தும் விதமாக, இலங்கை அமைச்சர்களுடன், திமுக எம்.பி. கனிமொழி மற்றும் இ.யூ.முஸ்லிம் லீக் ராமநாபுரம் எம்.பி. நவாஸ் கனி ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர்.
இது தொடர்பாக இலங்கை சென்ற எம்.பி.க்கள் இருவரும், அந்நாட்டு கடல் சார் அமைச்சர்கள் திலிப், அமீர் அலி, ஸாஹிர் மவுலான ஆகியோருடன் இது தொடர்பாக பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இது தொடர்பாக இந்த ஆண்டின் இறுதியில், மாநாடு நடத்தவும், அதில், மீனவர்கள் தாக்கப்படாமல் இருக்க சுமுக உடன்பாடு ஏற்படுத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது. மீனவர்கள் தாக்கப்படும் பிரச்சினைக்கு தீர்வு காண்பேன் என வாக்குறுதி அளித்தன் படி, நவாஸ்கனி எம்.பி. இந்த நடவடிக்கையில் இறங்கியுள்ளார்.