பெருமானார் (ஸல்) அவர்கள் கூறிய நற்செயல்கள்

Vinkmag ad

பெருமானார் (ஸல்) அவர்கள் கூறிய நற்செயல்கள்

ஒரு கிராமவாசி நபி (ஸல்) அவர்களிடம் வந்து கேட்டார்கள். யாரசூல்ல்லாஹ் தங்களிடம் சில கேள்விகள் கேட்கலாமா ? என்றவுடன் நபியவர்கள் ‘கேளுங்கள்’ என்றார்கள்.

 

1.நான் பணக்காரனாக என்ன செய்ய வேண்டும் ?

 

· நீங்கள் போதுமென்ற தன்மையை பெற்றுக் கொள்ளுங்கள். பணக்கார்ராகிவிடுவீர்கள்.

 

2. மிகப்பெரிய ஆலிமாக என்ன வழி ?

 

· தக்வாவை கடைப்பிடித்துக் கொள்ளுங்கள். ஆலிமாகி விடுவீர்கள்.

 

3. நான் கண்ணியமுடையவனாக வாழ வழி என்ன ?

 

· ஜனங்களிடம் கையேந்துவதை விட்டும் தவிர்த்துக் கொள்ளுங்கள்

 

4. நான் ஒரு நல்ல மனிதராக ஆக விரும்புகிறேன்.

 

· ஜனங்களுக்கு உங்களை கொண்டு பிரயோஜனம் ஏற்படட்டும். நல்ல மனிதராக ஆகி விடுவீர்கள்.

 

5. நான் நீதியுள்ளவனாக விரும்புகிறேன் ?

 

· நீங்கள் எதை விரும்புகிறீர்களோ, அதை மற்றவருக்கும் விரும்புங்கள்

 

6. நான் சக்தியுடையவனாக ஆக என்ன வழி ?

 

· அல்லாஹ்வின் மீது நம்பிக்கையை ஏற்படுத்துங்கள்

 

7. அல்லாஹ்வுடைய தர்பாரில் விசேஷ அந்தஸ்து கிடைக்க விரும்புகிறேன் ?

 

· அதிகமாக திக்ரு ( தியானம் ) செய்யுங்கள்

 

8. ரிஸ்கில் அபிவிருத்தி ஏற்பட என்ன வழி ?

 

· எப்பொழுதும் நிரந்தரமாக ஒழுவுடன் இருங்கள்

 

9. துஆ அங்கீகரிக்கப்பட என்ன வழி ?

 

· ஹராமான பொருளாதாரத்தை உண்பதை விட்டும் தவிர்த்துக் கொள்ளுங்கள்.

 

10. முழுமையான ஈமானுடையவராக என்ன வழி ?

 

· நற்குணமுடையவராக ஆகி விடுங்கள்

 

11. கியாமத்தில் அல்லாஹ்விடன் பாவமற்றவனாக பரிசுத்த நிலையில் சந்திக்க விரும்புகிறேன் ?

 

· குளிப்பு கடமையானவுடன் குளித்து விடுங்கள்

 

12. பாவங்கள் குறைய வழி என்ன ?

 

· அதிகமாக அல்லாஹ்விடன் பாவ மன்னிப்புத் தேடுங்கள்

 

13. கியாமத் நாளில் எனக்கு பிரகாசம் ஏற்பட வழி என்ன ?

 

· அநீதம் செய்வதை விட்டு விடுங்கள். பிரகாசம் கிடைக்கும்

 

14. அல்லாஹ் என் குறைகளை மறைக்க வழி என்ன ?

 

· பிறருடைய குறைகளை இவ்வுலகில் மறைத்து விடுங்கள்

 

15. உலகத்தில் இழிவடைவதை விட்டும் பாதுகாப்பு எதில் உள்ளது ?

 

· விபச்சாரம் செய்வதை விட்டும் தவிர்ந்து கொள்ளுங்கள். இழிவடையாமல் பாதுகாக்கப்படுவீர்

 

16. அல்லாஹ், ரசூல் உடைய பிரியனாக வழி என்ன ?

 

· அல்லாஹ், ரசூல் பிரியப்படக்கூடியவர்களை பிரியபடுங்கள்

 

17. அல்லாஹ், ரசூலுக்கு வழிப்பட்டவனாக ஆக வழி என்ன ?

 

· (F) பர்ளை பேணுதலாக கடைப்பிடியுங்கள்

 

18. நான் இறைத் தொடர்புடையவனாக ஆக வழி என்ன ?

 

· அல்லாஹ்வை பார்ப்பதாக என்ணி வணங்குங்கள் ( அல்லது ) அல்லாஹ் உங்களை பார்ப்பதாக எண்ணி வணங்குங்கள்

 

19. பாவத்தை விட்டும் மன்னிப்பளிக்கக்கூடிய வஸ்த்துக்கள் என்ன ?

 

· கண்ணீர், பலஹீனம், நோய்

 

20. நரகத்தின் நெருப்பை குளிர வைக்கக் கூடியது எது ?

 

· இவ்வுலகில் ஏற்படும் முஸிபத்தின் மீது பொறுமையாக இருப்பது

 

21. அல்லாஹ்வுடைய கோபத்தை எது குளிர வைக்கும் ?

 

· மறைவான நிலையில் தர்மம் செய்வது – சொந்த பந்தங்களை ஆதரிப்பது

 

22. எல்லாவற்றிலும் மிகப்பெரிய தீமை எது ?

 

· கெட்ட குணம் – கஞ்சத்தனம்

 

23. எல்லாவற்றிலும் மிகப்பெரிய நன்மை எது ?

 

· நற்குணம் – பொறுமை – பணிவு

 

24. அல்லாஹ்வுடைய கோபத்தை விட்டும் தவிர்த்துக் கொள்ள வழி என்ன ?

 

· மனிதர்களிடம் கோபப்படுவதை விட்டு விடுங்கள்

 

( ஆதாரம் : முஸ்னது அஹ்மது – கன்ஸுல் உம்மால் )

News

Read Previous

United Welfare Organization, Chennai

Read Next

எழுத்தாளர் சுஜாதாவின் நேர்காணல் – நிஜந்தன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *