நிலாச்சோறு
“நிலாச்சோறு” என மலையாளத்தில் “ஷாபு கிளிதட்டில்” அவர்கள் எழுதி வெளிவந்த உண்மை நாவலை தமிழில் “கே.வி.ஷைலஜா” அவர்கள் “கதை கேட்கும் சுவர்கள்” எனும் பெயரில் மொழிபெயர்த்திருக்கிறார். “உமா பிரேமன்” எனும் சாதனைப் பெண்மணியின் வாழ்வின் பாடுகளும் ஏற்றங்களுமாய் இக்கதை பயணிக்கிறது. ஒவ்வொரு பெண்ணும் இக்கதையில் தனக்கான ஒரு சிறு புள்ளி நம்பிக்கையையாவது கண்டடைய முடியும். வாழ்வின் துயர்கள் மூச்சுமுட்ட வைக்கும்போதெல்லாம் இக்கதையின் ஞாபகம் நமக்கு உயிர்காற்றை கொடுக்குமென தோன்றுகிறது. ஷைலஜா அக்கா, உமா அக்கா இருவரும் என் மனதுக்குள் இருக்கும் ஆகச்சிறந்த ஆளுமைகள். இத்தங்கையை எத்தருணத்திலும் நேசிக்கும் இந்த மூத்த சகோதரிகளோடு சமகாலத்தில் வாழ்வதிலும் பயணிப்பதிலும் பெருமிதம் கொள்கிறேன். தொடர்புக்கு … cvanithamani@gmail.com
Tags: நிலாச்சோறு