நம்பிக்கை
தோல்வியில் இருந்து
மீள்வது சுலபம்
வெற்றியை தற்காத்து
கொள்வது கடினம்…
உண்மை முகங்களை
அடையாளம் காண
நம் தோல்வி தான்
வழி காட்டுகிறது….
உயிரே போனாலும்
பிடிவாதத்தை விட்டு
தரமாட்டேன் என
சண்டையிட்டால்
அது மனோவியாதி…
மகிழ்வாக வாழ
நினைப்பது
பேராசையில்லை….
மகிழ்ச்சி
எண்ணத்தில் தான்.
மகிழ்வை தன்னுள்ளே
வைத்திருப்பவன்
வெளியே தேட மாட்டான.
ஒவ்வொருவரும்
தன் விருப்பத்தை
நிறைவேற்றவே
பயணிக்கின்றனர்
வாழ்க்கையில்..!
மனித மனங்களுக்கு
பின்னால் ஒரு மிருகம்
கட்டாயம் இருக்கும்.
வெளிப்படும் தன்மையை
பொருத்து தான்
வாழ்க்கை செல்லும்…!
வாழ்வில் வசந்தம் வரும்
என்ற நம்பிக்கையில்
வாழ துடிக்கிறான்
மனிதன்…..!
Tags: நம்பிக்கை