தமிழ் பதிவுகள்
By the Grace of God, Most Gracious, Most Merciful – On this day, I declare to initiate the construction of the Website which would slowly grow to become the largest virtual streaming video archive in Tamil over the next 22 years.
இதுவரை பதிவுகளை கொடுத்த அனைத்து அறிஞர்களுக்கும் மனமார்ந்த நன்றி.
ஒரு தனி மனிதனால் என்ன செய்துவிட முடியும் ?
இப்படி, நிறைய நண்பர்கள் என்னை கேட்டார்கள்
அவர்களுக்கான எனது பதில்……
ஒரு தனி மனிதனால் என்ன செய்துவிட முடியாது…….
ஒரு தனியார் மருத்துவக் கல்லூரியின் நான்கு சுவர்களுக்கு உள்ளே வாழும் ஒரு தனி மனிதனே இவ்வளவு செய்யும்பொழுது ?
தமிழே உயிர் என்று மேடைகளில் பேசும் தமிழ் ஆர்வலர்கள் ,தமிழ் மொழியை கற்றுணர்ந்த அறிஞர் பெருமக்கள் எவ்வளவு செய்ய முடியும் ?
சுமார் அறுபது வருடமாக கூட்டமாக தேர் இழுத்து இழுத்து – இன்று நமது தாய் மொழியை மோசமான நிலைக்கு அழைத்து வந்துள்ளோம் ?
கூட்டமாக இழுக்கும்பொழுது – தலைவர் தேவை – அவர் அனைத்தையும் தனது வீட்டிற்கு மெல்ல இழுத்துவிடுவார்.
சினிமாக்காரன் தனது சினிமா ஒடும் திரை அரங்கிற்கு , தனது கட்சிக்கு அனைத்தையும் இழுப்பான்
இன்று தமிழுக்கு தேவை – உண்மையான உணர்வுடன் –
“நான் என்ன செய்ய வேண்டும் எனது தாய்க்கு” என்று கேட்கும் இளைஞர் கூட்டமே
தலைவரே எனக்கு தேவையில்லை என்று நம்பிக்கையுடன் செயல்படும் இளைஞர் சிலர் இருந்தால் போதும் – மாற வேண்டிய அனைத்தும் இனி மாறும்
கடமையை செய் பலனை எதிர் பார்க்காதே…….
தனியாக பணியாற்றும் மன உறுதி அனைத்து இளைஞர்களுக்கும் தேவை.
திருக்குறள், பலருக்கு பல செய்திகளை கற்றுக்கொடுக்கும்
திருக்குறளில் என்னை அதிகம் கவர்ந்த அமைப்பு
திருக்குறள் – ஒரு தனி மனிதனின் தமிழுக்கான பயணம்