புதிய குடிநீர் ஆதாரங்களாக ஆற்றங்கரைகள்
புதிய குடிநீர் ஆதாரங்களாக ஆற்றங்கரைகள்
பேராசிரியர் கே. ராஜு
2018 மார்ச் 18 அன்று ஆங்கில இந்து நாளிதழில் அதிதி வீணா, விக்ரம் சோனி ஆகிய இரு சூழலியலாளர்கள் ஆற்றங்கரைகளை புதிய குடிநீர் ஆதாரங்களாக நாம் பயன்படுத்திக் கொள்வதற்கான வழிமுறையை கீழ்க்கண்டவாறு எடுத்துரைக்கின்றனர். உள்ளூரில் எப்போதுமே கிடைக்கக்கூடிய அற்புதமான நீராதாரமாக ஆற்றங்கரைகள் விளங்க முடியும். 2016-ம் ஆண்டில் தில்லி குடிநீர் வாரியம் தொடங்கிய `ஆற்றங்கரைத் திட்டம் சார்பாக நாங்கள் நடத்திய ஆய்வு இதைத் தெளிவாக்கியிருக்கிறது. யமுனை நதிக்கரையில் 25 கிலோமீட்டர் தொலைவுக்கு கரைப் பகுதிகளில் தேங்கியுள்ள நீரை ஒரு நபருக்கு தினசரி 150 லிட்டர் என்ற கணக்கில் சுமார் 10 லட்சம் மக்களுக்கு எங்களால் விநியோகிக்க முடிந்தது என்றால் பார்த்துக் கொள்ளுங்கள். லட்சக்கணக்கான ஆண்டுகளாக ஆறுகளில் பாயும் தண்ணீரினாலும் கரைகளில் மணல் சேருவதாலும் ஆற்றங்கரைகள் உருவாகின்றன. இந்த மணல் கரைகள் தனித்தன்மை வாய்ந்த நீர்நிலைகளாக காலப்போக்கில் உருமாறுகின்றன. அவற்றிலிருந்து நாம் எடுக்கும் தண்ணீரை அருகில் இருக்கும் நீர் உடனுக்குடன் ஈடுகட்டிவிடும். எனவே சேமிப்பு குறையாது. இமயமலையில் உற்பத்தியாகும் நதிகளின் கரைகளில் அந்த நதிகளில் ஓடும் நீரைப்போல 20 மடங்கு தண்ணீர் தேங்கியிருக்கிறது. மழைப்பொழிவினாலும் வெள்ளப்பெருக்கினாலும் ஆற்றங்கரை நீர்நிலைகளில் தண்ணீர் சேர்ந்து கொண்டேயிருக்கிறது. தூய்மையாகவும் இருக்கிறது. ஆற்றங்கரைத் தண்ணீரை பாதுகாத்து பயன்படுத்தி வருவோமானால், அது ஒவ்வோர் ஆண்டும் கடந்த ஆண்டில் எந்தளவுக்கு ஆரோக்கியமான நிலையில் இருந்ததோ அதே அளவுக்கு ஆரோக்கியமான நிலையில் நீடித்த நீர்தரும் சுனையாக இருக்கும். ஆனால் ஒரு எச்சரிக்கை: எந்தளவுக்கு நீர் சுரக்கிறதோ அதைவிடக் கூடுதலாக உறிஞ்சி எடுத்தோமானால் அது பாழ்பட்டு நாளடைவில் விலைமதிப்பற்ற வளத்தை இழக்கும்படி ஆகிவிடும்.
நகரங்கள், தொழிற்சாலைகள், விவசாயம் ஆகியவற்றுக்காக வகைதொகையின்றி ஆற்றுநீரை உறிஞ்சி எடுப்பதால் இன்று ஆறுகளில் ஓடும் நீர் வெகுவாகக் குறைந்துவிட்டது. அதோடு சாக்கடை நீரும் ஆலைக்கழிவு நீரும் ஆறுகளில் விடப்படுவதால் ஆற்றுநீர் மிகவும் மாசுபட்டுப் போயிருக்கிறது. சேமி – பயன்படுத்து என்ற ஆற்றங்கரை நீர்த்திட்டத்தின் மூலம் கரையோரங்களில் உள்ள நகரங்களுக்கு பற்றாக்குறைக் காலங்களிலும் தண்ணீரைத் தரமுடியும். இது ஒரு சமூக-பொருளாதார-சுற்றுச்சூழலுக்
ஆகா! கேட்கவே இனிப்பான செய்தியாக இருக்கிறதே? ஆனால்.. இது பெரிய ஆனால்…
நமது கேள்விகள் : தமிழ்நாட்டில் நடக்கும் மணற்கொள்ளையையும் ஆறுகளில் கழிவு நீர் கலப்பதையும் தடுக்காமல், இதில் எதையுமே நிறைவேற்ற முடியாதே? மணற்கொள்ளையர்களுக்கும், ஆலை அதிபர்களுக்கும் ஆட்சியாளர்களுடன் உள்ள கள்ள உறவைத் தடுத்து நிறுத்துவது எப்படி?