இதயங்களை வென்ற இளம் பத்திரிக்கையாளர்…

Vinkmag ad

இதயங்களை வென்ற
இளம் பத்திரிக்கையாளர்…

தேசிய சர்வதேச அளவில் மலையாள ஊடகங்கள் தலைப்பு செய்தியாக இன்று நாள் முழுவதும் உச்சரித்த பெயர் கே.எம். பஷீர்..
#சிறாஜ் மலையாள நாளிதழின் திருவனந்தபுரம் பதிப்பின் தலைமை சேய்தியாளரான கே.எம். பஷீர் நேற்றிரவு திருவனந்தபுரம் மியூசியம் காவல் நிலையம் அருகில் வைத்து கார் மோதி வபாஃத் ஆனார்…

பஷீர் மரணத்துக்கு காரணமான காரை ஓட்டி வந்த ஐஏஎஸ் அதிகாரி ஶ்ரீராம் வெங்கட்ராமன் குடி போதையில் இருந்தது தெரிந்தும் மியூசியம் ஸ்டேஷன் போலீசார் வழக்கு பதிவு செய்யாமல் தப்பிக்கவிட்டது தற்போது விவாதம் ஆகியுள்ளது..
பஷீரின் மரணத்திற்கு கட்சி வித்தியாசம் இல்லாமல் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ள கேரள அரசியல் பிரமுகர்கள் செய்தி சேகரிப்புடன் இணக்கமாக பழகியவர் என்பதையும் சுட்டிக்காட்டி பதிவு செய்தனர்..

அவரின் மரணத்துக்கு காரணமான ஐஏஎஸ் அதிகாரி மீது வழக்கு பதிவு செய்து கைது செய்ய வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளதுடன் முதல்வர் பிணராய் விஜயன், எதிர்கட்சி தலைவர் ரமேஷ் சென்னித்தலா ஆகியோர் நேரடியாக சென்று அஞ்சலி செலுத்தினர்..

பஷீரின் ஜனாசா  4.8.19 அதிகாலை சுப்ஹூ தொழுகைக்கு பிறகு கோழிக்கோடு செருவண்ணூர் மஸ்ஜித் வளாகத்தில் நல்லடக்கம் செய்யப்படுகிறது…
வல்ல அல்லாஹ் அவரது நற்பணிகளை பொருந்திக் கொள்வானாக…

News

Read Previous

வாழ்நாள் முழுவதும் நினைவிருக்கும் நண்பன் !

Read Next

‘தருமம்’ தமிழே!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *