முதுகுளத்தூர் வட்டாட்சியராக மோகன்

Vinkmag ad

ராமநாதபுரத்தில் வட்டாட்சியர்கள் 5 பேர் பணியிடங்களை மாற்றி மாவட்ட ஆட்சியர் க.நந்தகுமார் திங்கள்கிழமை உத்தரவு பிறப்பித்துள்ளார்.

ராமநாதபுரம் வட்டாட்சியராகப் பணியாற்றிய அன்புநாதன் ஆட்சியர் அலுவலக மேலாளராகப் பணிமாற்றம் செய்யப்பட்டுள்ளார். ராமநாதபுரம் சமூகப் பாதுகாப்புத் திட்ட வட்டாட்சியராகப் பணியாற்றிய மோகன் முதுகுளத்தூர் வட்டாட்சியராகவும், முதுகுளத்தூர் வட்டாட்சியராக இருந்த செழியன் ஆட்சியர் அலுவலக சமூகப் பாதுகாப்புத் திட்ட வட்டாட்சியராகவும் பணி மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

ஆட்சியர் அலுவலக மேலாளராகப் பணியாற்றி வந்த கதிரேசன் ராமநாதபுரம் வட்டாட்சியராகவும், ஆட்சியர் அலுவலகத்தில் சமூகப் பாதுகாப்புத் திட்ட வட்டாட்சியராகப் பணியில் இருந்து விடுப்பில் இருந்து வந்த வட்டாட்சியர் காமாட்சி ராமநாதபுரம் தாலுகா அலுவலக சமூகப் பாதுகாப்புத் திட்ட வட்டாட்சியராகவும் நியமிக்கப்பட்டுள்ளார்.

 

News

Read Previous

”தமிழின் 247 எழுத்துகளைக் கண்டு வியப்படைந்தேன்!” – சீனப் பெண்மணி, கலைமகள்

Read Next

பெங்களூர் தமிழ்ச் சங்கம்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *